தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட்களை திரும்ப எடுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்க ளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனி யார் வங்கிகளில் இருந்து டெபாசிட்டுகளை எடுப்பதாலும், மாற்றுவதாலும் வங்கித் துறை, நிதித் துறையின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படும். எனவே, தனியார் வங்கிகளில் இருக்கும் டெபாசிட்டுகளை பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றும் யோசனையில் மாநில அரசுகள் இருந்தால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.